(எங்கள் 3 வருட வாழ்க்கை பயணத்தின் ஓட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் "பொறுமை இருப்பவர்களுக்கு மட்டுமே" )
அன்று காலை சூரியன் கூட மிக உற்சாகமாக உதிர்த்து விட்டான், ஆனால் 4 மாத ஓய்வுக்கு பின் மீண்டும் கல்லூரி செல்ல வேண்டும் என்ற நினைப்பு சிறிது சோம்பலை தான் கொடுத்து இருந்தது. புதிய கல்லூரி என்பதை விட புதிய நண்பர்களை சந்திக்க போகின்றோம் என்ற எண்ணம் சிறிது உற்சாகத்தை கொடுத்தது.
கல்லூரிப் பேருந்தில் நல்ல கூட்டம், இடித்துப் பிடித்துக் கொண்டு தான் பயணம் ஆரம்பம் ஆகியது. உற்சாகமான ஆனால் பயம் நிறைந்த பயணம் அது. 5 நிமிடத்தில் கல்லூரி வந்துவிடும், 10 நிமிடத்தில் கல்லூரி வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு பயணத்தின் 30வது நிமிடம் வரை நீடித்தது.
நாங்கள் எல்லோரும் தினமும் முதலில் சங்கமிக்கும் இடம் எங்கள் கல்லூரி அல்ல ஆவடி பேருந்து நிலையம் தான்.....முதல் நாளின் ஆரம்பமே மனதில் சொல்லியது இனி 3 வருடங்களுக்கு இங்கு தான் என்று.... பயணம் ஆரம்பம் ஆகியது . கல்லூரிக்கு செல்லும் அரசு பேருந்து ஏறிவிட்டோம், ஆனால் முதல் பயணத்தில் எங்களுக்கு தெரியாது இவன் நம் வாழ்வின் முக்கியமானவனாக ஆக போகின்றான் என்று.......
கல்லூரிப் பேருந்தில் நல்ல கூட்டம், இடித்துப் பிடித்துக் கொண்டு தான் பயணம் ஆரம்பம் ஆகியது. உற்சாகமான ஆனால் பயம் நிறைந்த பயணம் அது. 5 நிமிடத்தில் கல்லூரி வந்துவிடும், 10 நிமிடத்தில் கல்லூரி வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு பயணத்தின் 30வது நிமிடம் வரை நீடித்தது.
ஒருவழியாக கல்லூரி வந்து சேர்ந்து விட்டோம், வழக்கம் போல securityin அன்பான உபசரிப்பினால் இனிதே வரவேற்கப் பட்டோம். கல்லூரிக்குள் நுழைந்ததும் நான் முதன் முதலில் சந்தித்தது சுரேஷ் குமார் தான், பார்த்த முதல் நொடியில் இருந்து அவன் என்கூட இங்கிலீஷ் ல தான் பேசினான், அத பார்த்ததும் மனதுக்குள் முதல் பயம் ஆகா இங்க எல்லோரும் இங்கிலீஷ் தான் பேசுவாங்க போல என்று, அடுத்த பதில் தான் பயத்திற்கு முக்கியமான காரணம், எந்த காலேஜ்னு கேட்டன் , பச்சயபாஸ்னு சொன்னான், ஆகா பச்சயபாஸே இவ்ளோ இங்கிலீஷ் பேசுதுணா, வாரவன்ல பயங்கரமா இங்கிலீஷ் பேசுவங்கனு எதிர் பார்த்தேன். (என் எதிர்பார்ப்பை பொய் ஆக்கிய என் நண்பர்களுக்கு நன்றி.) அடுத்து சந்தித்தது ராகுல் மற்றும் ஜோதி, இரண்டு பேரும் என கண்டுக்க கூட இல்ல, நேர அய்யப்பன் ஹால் கு வர சொன்னாங்க அத கண்டு பிடிச்சு போறதுகுள்ள போதும் போதும் னு ஆச்சு.
என் நண்பர்களாக ஆக போகிறவர்கள் அனைவரின் ஒத்திகை இங்கு தான் நடந்தது, இந்த இடத்தில நான் சந்தித்த முக்கியமான நபர் அல்லது நண்பன் சரவணன், பார்த்த உடனே தெரிந்தது அவன் மிகவும் நன்றாக படிக்கச் கூடிய மாணவன் என்று தெரிந்தது. அய்யப்பன் ஹாலில் என்னுடன் இருந்தவர்கள் சேலம் சுரேஷ் மற்றும் தினேஷ். அன்றைய நாள் முழுவதும் அவர்களுடன் தான். மிகவும் அமைதியான நண்பர்கள், ஹாலின் முன் மேடையில் எங்கள் ஒத்திகை நடந்து கொண்டிருந்து.
மிகவும் ரம்மியமான ஹால் அது,(எத்தன செமிநார் தூங்கி இருப்போம்). ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் நடந்து கொண்டிருந்தது, ஆனாலும் எல்லோரும் எல்லோரிடமும் அறிமுகம் ஆகிவிடவில்லை. பின் வரிசையில் அமர்ந்து இருந்தவர்கள் அதிகமாக பேசி கொண்டிருந்தனர், அது வழக்கம் தானே. முதல் அறிமுகம் கொடுத்த ஆசிரியர் ஜெயந்திலா மேடம். காலேஜின் அருமை பெருமைகளை கூறிக்கொண்டிருந்தார். அதிலிருந்து எங்கள் முகத்தினில் சோக அலைகள், ஆம் நாங்கள் யாரும் அவ்வளவு ஸ்ட்ரிக்டை அதிர் பார்த்து இருக்கவில்லை, ஆனலும் எங்கள் 3 வருடமும் இனிமையாக தான் கழிந்தது.
முதல் நாள் எனக்கு நியாபகம் இருந்த நண்பர்களும், காரணமும்
சுரேஷ் - முதல் சந்திப்பு
ராகுல், ஜோதி- எதிர் பாரத சந்திப்பு
சுரேஷ், தினேஷ்- பாகத்து இருக்கை
முருக வேல்- முதல் நாள் லந்து (இப்ப வர இவன் தொல்ல தாங்கல )
நந்த கோபால் - திருக்குறள் சொல்லி ஸ்கோர் பண்ணான்.
சரவணன்- நல்ல புள்ள
ராகவன்,கோபி -திருவள்ளூர்
போத் ராஜா - பிரெஞ்சு பியர்ட்
போத் ராஜா - பிரெஞ்சு பியர்ட்
பஷீர், ராமகிருஷ்ணன், பாலமுருகன் - எங்க ஊரு கார பயபுள்ள
வினோத்- பஸ்சில் அறிமுகம்
திவாகர்- வி ஐ டி
செல்வ மணி, லியோ, பூமி- சல சல சல னு பேசிக்கிட்டே இருந்தானுங்க
கார்த்திக் - பி.எஸ்.ஜி
மணிவண்ணன், தினேஷ்,சுந்தர், வைகுண்ட ராஜ், பெருசு - ஸாரி பாஸ் நியாபகம் இல்ல............ மத்தவங்கல்லா லேட்டா வந்த்ருபீங்க..........
- பயணம் தொடரும்.
machi scennu da who typed this da .it is cool to read da
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteseenu
ReplyDeleteகை ரேகை காகிதத்தில் பதியும்!
ReplyDeleteஉன் எழுத்துக்கள் எங்கள் மனதில்
பதியும்!
i like this comment so much da rama ur lines r grat
ReplyDeleteM.C.A vin sagaaptham..... idhan thodarchiyai edhir nookum un chellam DINESH DAWSON....
ReplyDeleteIn my life you are special person in my heart after seeing this blogspot its true da and i several time misread in my mind about you >>>>>>
ReplyDeletetoday you are just proved i am wrong and make me proud*********
CONTINUE YOUR GOOD WORK
FROM "SURESHKUMAR"
Seenu.. I want that continous da
ReplyDeleteநானும் பயணிக்கிறேன் உங்கள் பயணத்தில்
ReplyDelete